ஏன் இந்த சிறுமி இவ்ளோ வைரல்? படிச்சா போச்சு!

புதுடில்லி,

நேஹா என்னும் பெண் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தன் அண்ணன் மகளின் திறமை குறித்து ஒரு பதிவு செய்திருந்தார். அது பல லட்சம் லைக்குகள், பகிர்வுகள் என பெரும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. விமர்சனங்கள் அள்ளுகின்றது.

அதாவது தனது லேப்டாப்பைத் தரும்படி கேட்ட தன் அண்ணனுடைய மகளுக்கு ‘நோ’ சொல்லியிருக்கிறார் நேஹா. காரணம் அதில் முக்கியமான பணி சார்ந்த டேட்டாக் கள் இருப்பதால் அது விளையாடும் பொருள் அல்ல என அவர் கூறியிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த சிறுமி மூன்று மணி நேரங்கள் எடுத்துக்கொண்டு ஒரு அட்டை யில் தனக்குத் தானே ஒரு லேப்டாப்பை உருவாக்கியிருக்கிறார். அதில் பணிபுரிவது போன்று நினைத்துக்கொண்டு தன்னை மறந்து விளையாடிக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி. இதைக்கண்டு நெகிழ்ந்துபோன நேஹாவுக்கு அலுத்துவிடடார். பின்னர் சமூக வலைத்தளத்தில் இதனைப் பகிர்ந்திருக்கிறார்.

அது வேலை செய்யாது என்றாலும் அக்குழந்தையின் திறமையையும், செயலையும் கண்டு இணைய உலகம் வியந்து பாராட்டி வருகிறது. அச்சு அசலாக ஒரு கருப்புத் திரை, சரியான அளவில் வரையப்பட்ட லேப்டாப் பட்டன்கள் மற்றும் திரையில் ஆப் பிள் என்னும் வார்த்தையாக இந்தப் புகைப்படம் வைரல் ஹிட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here