புத்ராஜெயா: மலேசியாவில் வியாழக்கிழமை (மே 20) 6,806 புதிய கோவிட் -19 தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு டூவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் இப்போது ஒட்டுமொத்த தொற்று 492,302 ஆக உள்ளன.
சிலாங்கூரில் 2,277 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன – இது அனைத்து மாநிலங்களிலும் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
மேலும் மூன்று மாநிலங்களில் 600 க்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் உள்ளன – கோலாலம்பூர் 655, ஜோகூர் 615, சரவாக் 608.



















