ஜார்ஜ் டவுன்: பினாங்கு தனது மாநில நிதியைப் பயன்படுத்தி கூடுதல் கோவிட் -19 தடுப்பூசிகளை மத்திய அரசால் வழங்கப்படும் மருந்துகளுட்ச்ன் பயன்படுத்தும் என்று முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற மாநிலக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தடுப்பூசிகள் வழங்குவதைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு கூட்டத்தின் போது, பினாங்கு மக்களுக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் தடுப்பூசிகள் வழங்குவதில் சிறந்த அணுகுமுறையில் கவனம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் தடுப்பூசியோடு, உடனடி விநியோகத்திற்காக கூடுதல் தடுப்பூசிகளை வாங்க மாநில அரசின் நிதியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
அதை அடைவதற்கு, நாட்டிற்குள் சப்ளையர்கள் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்குவதற்கு மாநிலத்திற்கு அனுமதி பெற அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன்.
விண்ணப்பத்திற்கு மத்திய அரசு சாதகமாக பதிலளிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சோ வெள்ளிக்கிழமை (மே 21) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவது உட்பட கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று சோ கூறினார்.
இந்த சர்ச்சை வெடித்ததற்கு மன்னிப்பு கேட்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன். மேலும் இந்த நாட்டின் அனைத்து மக்களின் நலனுக்காக அடுத்த கோவிட் -19 தொற்று சவாலை எதிர்கொள்வதில் நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.