கத்திப்பார்த்தார் -கத்தியைப் பார்த்தார்!
மூன்றாவதும் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததால், வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவைச் சிதைத்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்து உள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
இந்த முறை தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று உறவினர்களிடம், அரவிந்த் கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை பற்றி அறிய அவரை ஸ்கேன் சென்டருக்கு அரவிந்த் அழைத்து சென்று உள்ளார்.
அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது விஜயலட்சுமியின் வயிற்றில் வளருவது பெண் குழந்தை என்று தெரியவந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த், விஜயலட்சுமியிடம் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு விஜயலட்சுமி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த கணவரே கத்தியைத் தூக்கினார்.