முடிக்கப்படாத கட்டுமானத் தளத்தில் முதியவரின் உடல் கண்டெடுப்பு

கோத்தா பாரு:  ஜாலான்  தெங்கு சிக் நகரில் கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் படிக்கட்டில் இருந்து வரும் துர்நாற்றம்  வருவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து ஒரு முதியவரின் சிதைந்த உடலைக் கண்டுபிடிக்க முடிந்தது.

கோத்தா பாரு ஒ.சி.பி.டி உதவி ஆணையர் அப்துல் ரஹீம் டாவூட், சினார் ஹரியன் மேற்கோள் காட்டி, அந்தப் பகுதியில் இருந்த ஒருவரிடமிருந்து காவல்துறையினர் ஒரு தகவலை பெற்றதாகக் கூறினர்.

போலீசார் உடனடியாக ஒரு குழுவை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் 60 வயது முதியவர் என்றும் பாதிக்கப்பட்டவர் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு  முன்பு  இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று ஏசிபி அப்துல் ரஹீம் கூறினார்.

எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லாமல் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.உடல் பிரேத பரிசோதனைக்காக Raja Perempuan Zainab II மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் உடலை அடையாளம் காண முன்வருவார்கள் என்று போலீசார் நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here