கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக வேண்டுமா?

 இந்த ஜுஸ்களை தினமும் குடிங்க !

கொரோனா இரண்டாம் அலையில் ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தற்போது படிப்படியாக குறைந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கொடிய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஒவ்வொருவரும் மாஸ்க்குகளை தவறாமல் அணிவதோடு, தேவையில்லாமல் வெளியே சுற்றுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு பழங்கள்  காய்கறிகள் பெரிதும் உதவி புரிகின்றன.

இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே ஒருவர் தினமும் போதுமான பழங்கள் , காய்கறிகளை அன்றாடம் தவறாமல் எடுக்க வேண்டும்.

இதனால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்சிடின்ட்டுகள் , கனிமச்சத்துக்கள் கிடைக்கும். கோவிட்- 19 செரிமான மண்டலத்தை பாதித்து, திசுக்களை சேதப்படுத்தி, வயிற்றில் அழற்சியை உண்டாக்குகின்றன.

நற்பதமான பழங்கள் , காய்கறிகள் செரிமான மண்டலத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு ஒரு குணப்படுத்தும், இனிமையான விளைவை அளிக்கிறது.

அதிலும் ஜூஸ்கள்- பானங்கள் இரத்த நாளங்களால் விரைவில் உறிஞ்சப்படுவதால், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க ஜூஸ்களைக் குடிப்பது சிறந்த வழியாகும். இதனால் இது கொரோனாவில் இருந்து விரைவில் மீள உதவுகிறது. காய்கறிகள் மற்றும் பழ ஜூஸ்களை ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை குடிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்து வலுவாக்குவதோடு, உடலினுள் உள்ள அழற்சியையும் குறைக்கிறது. ஆகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருசில ஜூஸ்களைக் குடிப்பதால் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாகலாம்.

தக்காளி புதினா ஜூஸ்

தக்காளி புதினா ஜூஸ் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது  இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் 4 தக்காளி உடன் எட்டு-பத்து புதினா இலைகளைப் போட்டு, ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு அரைத்து, அதில் சிறிது உப்பு, எலுமிச்சை சாறு , மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், ஜூஸ் சுவையாக இருப்பதோடு, ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

கேரட், பீட்ரூட், நெல்லி மற்றும் இஞ்சி ஜூஸ்

கேரட் மற்றும் பீட்ரூட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்ய உதவுகிறது,  கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்தது.

இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரிக்க, பிளெண்டரில் 2 கேரட், ஒரு பீட்ரூட், 2 நெல்லிக்காய், ஒரு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும். பின் அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்தால், ஜூஸ் தயார்.

சாத்துக்குடி, அன்னாசி , பச்சை ஆப்பிள் ஜூஸ்

இந்த ஜூஸ் வைட்டமின் சி, கால்சியம் சத்தை அதிகம் உள்ளடக்கியது. இத்தகைய ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை சிறப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் 2 சாத்துக்குடி, 250 கிராம் அன்னாசிப்பழம் . ஒரு பச்சை ஆப்பிளை நறுக்கிப் போட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால், ஜூஸ் தயார். கிவி, ஸ்ட்ராபெர்ரி , ஆரஞ்சு ஜூஸ் இந்த ஜூஸ் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது , நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்தது.

அதோடு இது இரத்த அழுத்த அளவைப் பராமரிக்க உதவுகிறது , நோய்வாய்ப்படுவதைத் தடுக்கிறது. இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி, 2 தோலுரித்த கிவி ,  ஒரு தோல் நீக்கிய ஆரஞ்சு பழத்தை பிளெண்டரில் போட்டு, அரை கப் நீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்தால், ஜூஸ் தயார்.

மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு

மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு இந்த பொருட்கள் அனைத்திலுமே அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன், ஆன்டி-வைரல்,  ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன.

இந்த பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் ஒரு தோலுரித்த ஆரஞ்சு, ஒரு எலுமிச்சை சாறு, ஒரு துண்டு இஞ்சி , சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்தால், ஜூஸ் தயார்.

வெள்ளரிக்காய், பசலைக்கீரை, செலரி, இஞ்சி , எலுமிச்சை ஜூஸ்

ஒருவர் வெள்ளரிக்காய், பசலைக்கீரை, செலரி, இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் இவை உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரிப்பதற்கு, 2 தோலுரித்த வெள்ளரிக்காய், 100 கிராம் பசலைக்கீரை, 4 செலரி துண்டுகள், 1 துண்டு இஞ்சி ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால், ஜூஸ் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here