கைபேசி மூலம் மைசெஜ்தெரா விண்ணப்பத்தை அணுக முடியவில்லை என்று பலர் புகார்

மைசெஜ்தெரா மொபைல் (கைபேசி) பயனர்கள் தங்களின் தடுப்பூசி விவரங்களை பெற முடியாததால் குழப்பமடைந்துள்ளனர். அநாமதேயமாக இருக்க விரும்பிய ஒரு பயனர்,  அவரின் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி நிலையை சரிபார்க்க விண்ணப்பத்தைத் திறக்க 10 முதல் 15 நிமிடங்கள் யுனிவர்சிட்டி டெக்னோலாஜி மாரா ஷா ஆலத்தில் காத்திருந்ததாகக் கூறினார்.

அவர்கள் சொந்த ஆஃப் (app) பயன்படுத்தும்படி என்னிடம் சொன்னார்கள். ஆனால் அது பயனில்லை. தடுப்பூசி இடத்தில் என்னால் ஸ்கேன் செய்ய முடியவில்லை. 15 நிமிடங்கள் கழித்து, இவை அனைத்தும் அவர்களாலே செய்யப்பட்டன. தடுப்பூசி பெற்ற பின்னர் வீட்டிற்குச் சென்று தனது டிஜிட்டல் சான்றிதழ் மைசெஜ்தேராவில் வழங்கப்படும் வரை காத்திருக்குமாறு கூறினார். நான் வீட்டிற்கு வந்தேன், ஆனால் இன்னும் (விண்ணப்பத்திற்கு) செல்ல முடியவில்லை  என்று அவர் கூறினார்.

மற்றவர்கள் சமூக ஊடகங்களுக்கு இந்த குறைபாட்டை கேள்விக்குட்படுத்தவும், அவர்களின் விரக்திக்கு குரல் கொடுக்கவும், இது தடுப்பூசி செயல்முறையையும் பாதித்ததாகக் கூறினர்.  மக்கள் தங்கள் சந்திப்புகளை சரிபார்க்க அனுமதிக்க ஒரு மடிக்கணினியை வெளியில் அமைக்க வேண்டும்.

வெளியே (பிபிவி) குழப்பமானதாக இருக்கிறது. உள்ளே அமைதியாக இருக்கிறது. இதற்கிடையில், மற்றொரு  பயனர் இன்று மதியம் 12.06 மணிக்கு தற்போது திட்டமிடப்பட்ட பராமரிப்பில் இருப்பதாகக் கூறி ஒரு ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டார். பகல்நேர திட்டமிடப்பட்ட பராமரிப்பு தடுப்பூசி போட விரும்புவோருக்கு மேலும் தடையை ஏற்படுத்துகிறது. நேரம் விலைமதிப்பற்றது. தயவுசெய்து அதற்கேற்ப திட்டமிடுங்கள் என்று  JKJAV டுவிட்டர் கணக்கில் குறிபிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here