அறுவை சிகிச்சைக்கு பின் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியிலேயே தினசரி பிரார்த்தனை, ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 4-ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது குறைந்தது.
இருப்பினும் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் ஆஸ்பத்திரியிலேயே தினசரி பிரார்த்தனை ,ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.