அப்துல் கலாமின் ஆசை..இதுதான்.
அப்துல் கலாம் குறித்து அவருடைய அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரின் பேரன் சேக்தாவூது கூறியதாவது:-
என்னிடம் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமுடன் இருக்க வேண்டுமென தெரிவித்தார். அதன்படி தினமும் புத்தகம் படிப்பதை இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறேன்.
குழந்தைகளை அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு முறை குடும்பத்தோடு நான் தாத்தாவை சந்தித்த போதெல்லாம் எனது குழந்தையுடன் ஒரு மணி நேரம் மகிழ்ச்சியுடன் விளையாடினார். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. அந்த ஆசை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.