போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நண்பர்களை காப்பாற்ற போலீசாருக்கு 10 ஆயிரம் வெள்ளி லஞ்சம் வழங்கிய ஆடவர் கைது

கோலாலம்பூர், ஜின்ஜாங்கில் உள்ள ஒரு ஹோட்டலின் முன் நேற்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தனது இரண்டு நண்பர்களை விடுவிக்க போலீசாருக்கு  10,000 வெள்ளியை ரொக்கமாக லஞ்சம் கொடுக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

28 வயதான சந்தேகநபர் இதற்கு முன்னர் எச்சரிக்கப்பட்டிருந்தாலும் அதை புறக்கணித்ததால், அவரை கைது செய்து எம்.ஏ.சி.சி.யிடம் ஆதாரங்களுடன் ஒப்படைத்ததாக செந்தூல் போலீஸ் தலைவர் ஏசிபி பெ எங் லாய் கூறினார்.

அந்த நபர் அதே இரவு 7.45 மணிக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் கீழ் கைது செய்யப்பட்டார். முன்பு, அவரது இரண்டு நண்பர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மதியம் 3.45 மணியளவில்   ஜின்ஜாங்கில் உள்ள ஒரு ஹோட்டலின் முன் நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டனர் மற்றும் 130.5 கிராம் கஞ்சா அடங்கிய 10 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில் முதல் குற்றவாளிக்கு 25 குற்றப்பதிவு மற்றும் ஏழு போதைப்பொருள் தொடர்பான கிரிமினல் பதிவுகளைக் கொண்டிருப்பதைத் தவிர, மெத்தம்பேட்டமைன் மற்றும் கஞ்சா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு  இரண்டாவது சந்தேக நபர்  என்றும் குற்றவியல் பதிவு இல்லை என்றும் அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

இரண்டு சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பெஹ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here