கோலா திரங்கானு: தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் அரசு அறிவிக்கும் என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடியின் யாசின் கூறினார்.
கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடியும் என்பதை உறுதி செய்வதாக அவர் கூறினார்.
“இந்த (தடுப்பூசி எதிர்ப்பு) குழு பற்றி நாங்கள் ஆய்வு செய்து சில ஆராய்ச்சிகளை மேற்கொள்வோம். அவர்கள் தடுப்பூசி எடுக்க பயப்படுகின்ற அளவுக்கு அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்களா, அல்லது அவர்கள் ஏன் தடுப்பூசியை எடுக்க விரும்பவில்லை மற்றும் தடுப்பூசி மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா என்ற பின்னணியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.
“எனவே, நாங்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து அவர்களின் ‘விழுக்காடு மிகச் சிறியதாக இருந்தால், அது கவலைப்பட வேண்டிய தேவை குறைவு… மாறாக அது பெரியதாக இருந்தால், தற்போதுள்ள சட்ட விதிகளின்படி அவற்றை கட்டாயமாக்க வேண்டுமா என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றார். அதற்கான நடவடிக்கைகள் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் அரசு முடிவு செய்யும், “என்றும் கூறினார்.
இன்று தாமான் தாமாதுன் இஸ்லாமில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு (PPV) சென்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
– பெர்னாமா























