கோலாலம்பூர்: இதுவரை 7,599 அல்லது 3.05 விழுக்காடு சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வப்போது திரையிடலின் போது சுகாதார அமைச்சகம் இப் புள்ளிவிவரங்களை பதிவு செய்தது.
சுகாதார டைரக்டர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்தம் 17 தொற்றுக்கள் அல்லது 0.22 விழுக்காடு மட்டுமே 3, 4 மற்றும் 5 பிரிவுகளில் இருப்பதாக கூறினார்.
மேலும் “பிரிவு 5 இல் சிகிச்சை பெற்றவர்களில் இரு இறப்புகள் பற்றி எங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஒரு சமூக ஊடக பதிவில் கூறினார்.
டாக்டர் நூர் ஹிஷாம் கூறுகையில், தடுப்பூசி கோவிட் -19 நோயாளிகளின் தீவிரத்தன்மை மற்றும் இறப்புகளை குறைக்க திறம்பட செயல்படுகிறது, இருப்பினும் தடுப்பூசி செலுத்துவதால் 100 விழுக்காடு பயனுள்ளவை என்று கூற முடியாது.
மேலும் அப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தின் அடிப்படையில், 7,599 பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் மொத்தமாக 5,135 அல்லது 67.6 சதவிகிதம், முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன என்று கூறினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 32.2 சதவிகிதம் மொத்தம் 2,446 பேர் வகை 1 இல் இருந்தனர்; தீவிர சிகிச்சை பிரிவில் (lCU) சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் வகை 3 (நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்)-10 பேர் , வகை 4 (ஆக்ஸிஜன் உதவி தேவை) -4 பேர் மற்றும் வகை 5 -3 பேர் எனவும் அவர் தெரிவித்தார்.