இலங்கையில் வர்த்தகர் ஒருவரின் செயல்பாடு குறித்து அனைத்து மக்களாலும் அதிகம் பேசப்படுகிறது.

இலங்கையின் களனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் பகிர்ந்தளித்துள்ளார். ஒரே நாளில் இரண்டரை கோடி ரூபாயை இவ்வாறு அவர் மக்களுக்கு வழங்கியுள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே தனது சொந்த நிதியில் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாயை மக்களுக்கு பகிர்ந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















