அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கலந்துரையாடல் சொக்சொ ஏற்பாடு

சமூகப் பாதுகாப்பு இயக்கமான சொக்சொ அனைத்துலக பொது வேலைவாய்ப்பு கலந்துரையாடல் 2021 எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வேலை தேடுவோருக்கும் சரியான தகவல்களைக் கொண்டுசென்று சேர்ப்பதற்கு உதவும் நோக்கத்தை இது கொண்டிருக்கிறது.

  கோவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த நடவடிக்கை உதவ முடியும் என்று சொக்சொ வெளியிட்ட அறிக்கை கூறியது.

  மெய்நிகர் வாயிலாக இந்த அனைத்துலகக் கலந்துரையாடல் நடத்தப்படும். இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரையில் மூன்று பகுதிகளாக இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

  மலேசியர்கள் அனைவரும் இதில் பங்கேற்லாம். நுழைவு இலவசம். சொக்சொ நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் ஹஸ்மான் அஸிஸ் முகமட் உட்பட நிர்வாகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

  பதிவுக்கு 1300-22-8000 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது சொக்சொவின்  ipef@perkeso.gov.my என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here