புலமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம். மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். உடல் நல குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.காலத்தில் சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும் இருந்தார். அவர் புரட்சி தலைவரின் திரைப்படங்களுக்கு ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். மேலும் செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவராகவும் அஇஅதிமுக அவை தலைவராகவும் பணியாற்றினார்.