ஜோகூர் பாரு கடற்கரையில் 74 வயது மாதுவின் சடலம் மீட்பு

ஜோகூர் பாரு ஜாலான் சுல்தான் இப்ராஹிமில் உள்ள ஸ்டுலாங் கடற்கரையில் 74 வயது பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதன் தொடர்பில் இன்று  (செப்டம்பர் 22) காலை 11.27 மணியளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்கத் தளபதி சியுஹைடி ஃபாஸ்லி யஹயா கூறினார்.

இறந்தவர், டாம் ஃபுங் சியோங் @ என்ஜி சீவ் லெங் என அடையாளம் காணப்பட்டது. உடலைக் கண்ட பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை எடுத்துச் செல்ல காவல்துறையினர் துறையின் உதவியை கோரினர் என்று அவர் இங்கே ஒரு அறிக்கையில் கூறினார். மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here