கோத்த கினபாலு தெனோம் மாவட்டத்தில் கவிழ்ந்த படகில் இருந்து தவறி விழுந்த இருவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.இன்று (செப்டம்பர் 22) பிற்பகல் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 50 வயது மதிக்கத்தக்க ஒருவரும் 10 வயது சிறுவனும் இருவரும் வலுவான ஆற்றின் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.
மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உதவி இயக்குநர் மிஸ்ரான் பிசாரா கூறுகையில், ஆரம்ப தகவலின்படி, பாதிக்கப்பட்ட இருவரும் படகில் இருந்தனர். அவர்கள் மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது படாஸ் ஆற்றைக் கடக்கும்போது படகு பலமான அலைகள் தாக்கியது.
படகில் பயணத்த 4 பேரில் இரண்டு பேர் – ஒரு ஆணும் பெண்ணும் – ஆற்றங்கரைக்கு நீந்தி வந்தனர். மற்ற இருவரும் வலுவான ஆற்றின் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். காணாமல் போன இருவரை மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று மிஸ்ரன் கூறினார்.