கோத்தா கினாபாலு: செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்கள் மீது பாலியல் குற்றங்களுக்காக தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதி எல்சி பிரைமஸ் முன்னிலையில் இரண்டு பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் படித்துக் காட்டப்பட்ட போது, இருவரும் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று மறுப்புத்தெரிவித்தனர்.
முதல் வழக்கில், தனது மாற்றாந்தாய் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவரின் வழக்கு, எதிர்வரும் அக்டோபர் 27 க்கு ஒத்திவைக்கப்பட்டது .
கோத்தா மருடு கிராமத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு தனது 10 வயது சித்தியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கு, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (3) ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 8 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 10 பிரம்படிகள் வழங்குவதற்கும் ஏற்புடையது.
இரண்டாவது வழக்கில், 32 வயதான ஆடவர் தனது எட்டு வயது மருமகளை செப்டம்பர் 19 அன்று மாலை 4 மணிக்கு ரானாவ்வில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறையில் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கு, 2017 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பிரிவு 14 (a) ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படிகள் வழங்குவதற்கும் ஏற்புடையது.
வழக்கு, எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.