கோலாலம்பூர்: இன்று காலை கெனிங்காவ் மருத்துவமனையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் ஒரு கோவிட் -19 நோயாளி செய்த முயற்சி தடுக்கப்பட்டது.
காலை 6 மணியளவில் கெனிங்காவ் மருத்துவமனையிலிருந்து தப்பிக்க எண்ணிய 24 வயதுடைய பெண், மருத்துவமனையின் ஒரு மாடியில் மாட்டிக்கொண்ட போது, கெனிங்காவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (BBP) தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டார்.
சம்பந்தப்பட்ட பெண் நேற்று முதல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது புரிகிறது.
கெனிங்காவ் BBP தலைவர் ஷாரூடி டெலமின் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், காலை 6.19 மணிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவிற்கு அவசர அழைப்பு வந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
மேலும் அவசர சேவைகள் உதவிப் பிரிவின் (ERMS) இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுடன் வந்த ஏழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினரால் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது என்றார்.
“அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், பாதிக்கப்பட்டவர் கெனிங்காவ் மருத்துவமனை கட்டிடத்திற்கு வெளியே முதல் மாடியில் சிக்கிக்கொண்டிருந்தார்.
ஹரியன் மெட்ரோ அறிக்கையின்படி, “தீயணைப்பு படை, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் (PPE) முழுமையாக அணிந்து கொண்டு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில், பாதிக்கப்பட்டவரை கீழே கொண்டு வர படிக்கட்டுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியை மேற்கொண்டது” என்று அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்றும் அதன் பின்னர் அவரை மருத்துவமனை மற்றும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்றும் அவர் கூறினார்.