கடந்த 24 மணி நேரத்தில் 8,817 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்திருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,294,457 ஆக உள்ளது.
சரவாக் அதிகபட்சமாக 1,361 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலாங்கூர் (1,348), கிளந்தான் (1,063), ஜோகூர் (886), சபா (805), பகாங் (696), பினாங்கு (595), கெடா (576), பேரக் (473), தெரெங்கானு (356), மலாக்கா (246), கோலாலம்பூர் (217), நெகிரி செம்பிலன் (122), பெர்லிஸ் (47), புத்ராஜெயா (23) மற்றும் லாபுவான் (3).