அலோர்ஸ்டார்: இன்று அதிகாலை, மெர்கோங் தெஸ்கோ (Tesco) அருகில் 3.10 மணியளவில் பெரோடுவா மைவி வகை கார் விபத்திக்குள்ளாகி ஏற்பட்ட தீயில் எரிந்த நிலையில் 19 வயது பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஓட்டுநர் இருவரும் உடல் கருகி பலியாகினர்.
பாதிக்கப்பட்ட பெண் தான் சான் வென் என்றும், காரின் ஆண் டிரைவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் கெடா தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் சயானி சைடன் கூறினார்.
இன்று அதிகாலை 3.11 மணியளவில் இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், அலோர்ஸ்டார் நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“ஆரம்ப விசாரணையில் கார் விபத்துக்குப் பிறகு தீப்பிடித்ததாகத் தெரிகிறது, வாகனத்தின் 80 விழுக்காடு சேதமடைந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
செபெராங் நியோனியா மற்றும் காவல்துறையினரின் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 3.25 மணிக்கு தீயை அணைக்க முடிந்தது என்றும் சயானி கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீஸ் மேற்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.