ஆடவர் ஒருவர் தனது காதலியை அறைந்த ஒரு காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அவர் தானாகவே போலீஸில் சரணடைந்தார்

கூச்சிங்: ஜாலான் பெண்டிங்கில் உள்ள உணவகத்தில் தனது காதலியை அடித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானதால், அந்த ஆடவர் நேற்று போலீஸ் அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

நேற்று மாலை 6 மணிக்கு இங்குள்ள கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு (IPD) சந்தேக நபரான அந்த ஆடவர் வந்தபோது, கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் அஹ்ஸ்மோன் பாஜா கூறினார்.

“உள்ளூர் மற்றும் 30 வயதிற்குட்பட்ட தம்பதியினரிடையே ஏற்பட்ட தவறான புரிதலால் இந்த சம்பவம் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

“எனினும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த புதன்கிழமை நடந்த அந்த சம்பவத்தின் 20 வினாடி (CCTV) கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பேஸ்புக்கில் வைரலானது என்று அஹ்ஸ்மோன் கூறினார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து சந்தேகநபரின் காதலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், சந்தேகநபர் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதற்காக தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 323 ன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here