இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில், பா.ஜ.க. எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்பு

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில், பா.ஜ.க. எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றது தொடர்பான புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, நேற்று, அண்டை நாடான இலங்கைக்குச் சென்றார். அவருக்கு, அந்நாட்டு அமைச்சர்கள் அனைத்துலக விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையில், அலரி மாளிகையில், இன்று மாலை நடைபெற்ற நவராத்திரி விழாவில், பா.ஜ.க., எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து, சமூக வலைதளமான ட்விட்டரில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ள பதிவில், நீண்ட கால நண்பர் மற்றும் சகாக்களுடன் நவராத்திரி கொண்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் பாதுகாப்பான, வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நவராத்திரியாக அமைய வாழ்த்துகள். கடவுளின் ஆசிர்வாதங்களுடன் நாம் பயணிக்கும் பாதையில் வெற்றி ஒளிர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here