இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மாேகன் சிங், 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை என, தொடர்ந்து 10 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். தற்போது அவருக்கு வயது 89. வயது மூப்பு மற்றும் உடல் நலப் பிரச்னைகளால், பொது நிகழ்ச்சிகளில், மன்மோகன் சிங் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை, காய்ச்சல் மற்றும் பலவீனம் காரணமாக, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்,  மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது.

இருதயப் பிரிவில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா இரண்டாவது அலையின் போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொற்று உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here