6 வயதான தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

கோத்தா கினபாலு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6 வயதான தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக செசன்ஸ் நீதிமன்றம் ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 தடவைகள் பிரம்படியும் விதித்தது.

நீதிபதி அஸ்ரினா அஜீஸ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு, இத் தண்டனைகளை வழங்கினார். மேலும் இவ்வழக்கில் குற்றம் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி கூறினார்.

40 வயதான குற்றவாளி ஆகஸ்ட் 11, 2019 அன்று சிபிராங்கில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் 6 வயது குழந்தைக்கு எதிராக இந்த செயலை செய்தார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 (3) ன் கீழ் குற்றம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் தண்டனையும் மற்றும் பிரம்படியும் விதிக்க இது வழிசெய்கிறது.

அரசு தரப்பு ஏழு சாட்சிகளையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு குற்றவாளி உட்பட 4 பேரையும் அழைத்தது. குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளான இன்று முதல் தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது. இருப்பினும்,  உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வரை தண்டனையை நிறுத்த கோரி, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு செய்த விண்ணப்பத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

​​குற்றம் சாட்டப்பட்வர் தரப்பு வழக்கறிஞர், அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாலும் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளதாலும் குறைந்தபட்ச தண்டனையை கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அவர் பாதுகாக்க வேண்டிய உயிரியல் குழந்தைக்கு எதிராக, அந்த நபர் கடுமையான குற்றத்தைச் செய்ததாகக் கூறி, கடுமையான தண்டனையை வழங்குமாறு அரசு தரப்பு நீதிமன்றத்தில் கோரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here