கடந்த 24 மணி நேரத்தில் 7,509 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 9,531 மீட்பு இருப்பதாகக் கூறினார். மொத்தமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,261,289 ஆக உள்ளது.
மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,384,542 ஆக உள்ளது என்று நூர் ஹிஷாம் கூறினார். தீவிர சிகிச்சையில் 695 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 630 பேர் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் மற்றும் 65 பேருக்கு தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
இதற்கிடையில் 347 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 281 நோயாளிகளுக்கு கோவிட் -19 தொற்று இருப்பதாகவும் மற்றும் மீதமுள்ள 66 பேர் தொற்று இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இன்று 7,493 உள்ளூர் நோய்த்தொற்றுகள் இருந்தன. இதில் 6,967 மலேசியர்கள் மற்றும் 526 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட 16 தொற்றுகளும் இருந்தன.