நான் சூதாட்ட சங்கங்களிடமிருந்து மாதந்தோறும் லஞ்சம் பெறுவதில்லை என்கிறார் சிலாங்கூர் எம்.பி

கோலாலம்பூர், அக்டோபர் 19:

சிலாங்கூர் எம்.பி. யான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (படம்) சிலாங்கூரில் உள்ள சட்டவிரோத சூதாட்ட சங்கங்களில் இருந்து தான் லஞ்சம் பெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறுகிறார்.

“சட்டவிரோத சூதாட்ட சங்கங்களிலிருந்து மாதாந்திர பணம் பெறுவதற்கு என்னை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டு தொடர்பாக, எந்த அடிப்படையும் இல்லாத இந்த கூற்றை நான் மறுக்கிறேன்,” என்று அவர் திங்கள்கிழமை இரவு (அக்டோபர் 18) ஒரு டுவீட்டில் கூறினார்.

அவரது மறுப்பு ட்விட்டரில் @edisi_siasatmy இன் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வந்துள்ளது, சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் சட்டவிரோத சூதாட்டச் சங்கங்களில் இருந்து மாதந்தோறும் 150,000 வெள்ளி பெறுவதாகக் கூறினார்.

இந்தப் பணம் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமிருடினைத் தவிர, சட்டவிரோத சூதாட்ட சிண்டிகேட்களுடன் தொடர்புடைய பல டுவீட்களில் பலரது பெயரும் வெளியாகியிருந்தது.

ஒரு டுவிட்டர் கணக்கின் அநாமதேய நிர்வாகி, பல நிறுவனங்களில் இருந்தும் சிண்டிகேட்களிடமிருந்தும் அமலாக்க அதிகாரிகள் மாதாந்த பணத்தை பெற்று கொள்வதாக கூறினார்.

இதற்கிடையில், பல சமூக ஊடக பயனர்கள் அமிர்டின் குற்றச்சாட்டை மறுத்ததற்காக அவரைப் பாராட்டினர், இருப்பினும் காவல்துறையில் புகார் அளிக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here