இன்று காலை நடந்த ஒரு சாலை விபத்தில் சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்

ஈப்போ: இன்று காலை ஜாலான் ஜெலபாங் – தாமான் மேரு பெர்டானாவில் இன்று (அக். 20) சாலையில் இருந்து விலகி வாகனம் குடைசாய்ந்ததில் சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.

பேராக் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, இன்று காலை 7.29 மணியளவில், 42 வயதான அந்த நபர் விபத்துக்குள்ளான ஒரு நான்கு சக்கர வாகனத்தில் சிக்கிக்கொண்டிருந்ததை சாலையில் பயணம் செய்த ஏனைய பயணிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.

“அவரைக் கண்டுபிடித்தவர்களின் உதவிக்கு நன்றி, ஏனெனில் நாங்கள் வருவதற்கு முன்பு அவர்கள் பாதிக்கப்பட்டவரை வாகனத்திலிருந்து வெளியே எடுத்து விட்டனர்” என்றார்.

“வாகன ஓட்டுநர் செமோரிலுள்ள தனது வீட்டில் இருந்து ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு (HRPB) பணிக்காக தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார், இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சம்பந்தப்படவில்லை.

மேலும் பாதிக்கப்பட்டவர் மருத்துவ உதவிக்காக HRPB க்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அந்த இடத்திலேயே முதலுதவி சிகிச்சையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here