கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் இருந்து தப்பிய கார்

பாலேக் பூலாவ் சாலையில்   ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு விழுந்ததில் அவ்வழியே சென்று கொண்டிருந்த கார் கண்ணிமைக்கும் வேளையில் பெரிய சேதத்தில் இருந்து தப்பியது. இன்று (அக் 22) ஜாலான் துன் சார்டோனில் இருந்து  பாலேக் பூலாவ் செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்தது.

சாலை தடுப்பின் ஒரு பகுதி சேதமடைந்த போதிலும் சம்பவத்தின் போது உயிர்சேதம் ஏதும் இல்லை என்று நம்பப்படுகிறது. விழுந்த பாறாங்கல் பாதி சாலையை அடைத்ததால் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here