முகம் கழுவி கொண்டிருந்தபோது ஜெட்டியில் இருந்து தவறி விழுந்த ஆடவர் பலி

ஷா ஆலம், சுங்கை பெசார் சுங்கை நிபா ஜெட்டியில் நேற்று (அக் 22)  நீரில் விழுந்த 38 வயது  ஆடவரின்  உடல் இன்று மீட்கப்பட்டது. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உதவி இயக்குனர் ஹபிஷாம் முகமட் நூர் கூறுகையில், நேற்று இரவு 11.45 மணியளவில் அந்த நபர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு, நீரில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படுகிறது.

அவர் தண்ணீரில் விழுந்ததாக நம்பப்படும் இடத்தில் இருந்து சுமார் மூன்று மீட்டர் தொலைவில் இரண்டு மீட்டர் ஆழத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்று அவர் சனிக்கிழமை (அக். 23) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். முகத்தை கழுவிக் கொண்டிருக்கும் போது ஜெட்டியில் இருந்து தவறி விழுந்ததாக முந்தைய செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here