கோலாலம்பூர்:
46வது ஆசியான் உச்ச நிலை மாநாடு இன்று கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
இது ஆசியாவின் பிராந்தியம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, உறுப்பு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ஆசியானுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் உதவுகிறது.
இந்த ஆண்டு மலேசியாவின் தலைமையில் முதல் அதிகாரப்பூர்வ கூட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களை இன்று காலை பிரதமர் வரவேற்றார்.
ஆசியான் அமைப்பு தொடர்ந்து உயர்ந்து, உலகளாவிய மரியாதையைப் பெற்று, நமது பிராந்திய மக்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு ஆதாரமாக மாறும் வகையில், ஆசியானை ஒற்றுமை, தைரியம் மற்றும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் வழிநடத்த மலேசியா உறுதிபூண்டுள்ளது என்று, பிரதமர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.




















