காரில் இறந்து கிடந்த ஆடவரின் உடல் மீட்பு

ஜார்ஜ் டவுன், குலுக்கோரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் 40 வயதுடைய நபர் தனது காரில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று இரவு 7.34 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கார் பூட்டப்பட்டிருப்பதாகவும், கதவுகளை உடைத்து உள்ளே நுழைய வேண்டும் என்றும் கூறினார். பாதிக்கப்பட்டவர் ஓட்டுநர் இருக்கையில் சுயநினைவின்றி காணப்பட்டார், பின்னர் அவர் இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. இரவு 7.51 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்து, வழக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here