இன்று முதல் சீன மருந்து கடை, பல சரக்கு கடைகளில் மதுபானம் விற்கத் தடை

கோலாலம்பூரில் உள்ள மளிகைக் கடைகள்,பல சரக்குக் கடைகள், சீன மருத்துவக் கடைகள் ஆகியவற்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கான தடை இன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

வாடிக்கையாளர்கள் இன்னும் இதுபோன்ற வளாகங்களில் பீர் வாங்க முடியும் என்றாலும், அவற்றை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே விற்க முடியும் என்று கோலாலம்பூர்  மாநகர மன்றம் (டிபிகேஎல்) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவிருந்த தடை, டிபிகேஎல் நடத்தி வரும் ஆய்வுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here