ஜார்ஜ் டவுன், நவம்பர் 9 :
இன்று அதிகாலை, லிண்டாங் கம்போங் மலாயுவில் உள்ள தேசா மாவார் குடியிருப்பின் பிளாக் 3 இன் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 13 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவம் குறித்து அதிகாலை 4.12 மணியளவில் பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புப் படையினர் அதிகாலை 4.21 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 13 மோட்டார் சைக்கிள்கள் முற்றாக எரிந்து நாசமாகியிருந்ததைக் கண்டதாக மீட்பு நடவடிக்கைத் தளபதி ஷரேல் அனுவார் மாவார்டே தெரிவித்தார்.
வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன என்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மீட்புக் குழுவினர் அதிகாலை 4.32 மணியளவில் தீயை முழுமையாக அணைத்ததாக ஷரல் கூறினார்.
4.46 மணியளவில் மீட்புப்பணிகள் முடிவடைந்தன என்றார்.
மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.