பண்டார் புக்கிட் திங்கியில் நடந்த கொலை வழக்கில் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

ஷா ஆலம்: கடந்த சனிக்கிழமையன்று  பண்டார் புக்கிட் திங்கி 2, கிள்ளானில் உள்ள ஒரு காபி கடைக்கு முன்னால் நடந்த கொலை வழக்கின் விசாரணையில் உதவுவதற்காக நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் Nik Ezanee Mohd Faisal அவர்கள் லோ சீ பூன் 41, கடைசி முகவரி எண். 87 ஜாலான் 14, கம்பங் இடாமான், போர்ட் கிள்ளான் மற்றும் Lim Chee Hau, 39, கடைசி முகவரி எண் 586, Lorong 23, Jenjarom. டான் கோக் பின் 34, கடைசி முகவரி எண். 8 ஜலான் பகாங் 7, ஸ்ரீ ஜரோம், ஜெஞ்ஜாரோம் மற்றும் யாப் சின் ஹாக் 58, கடைசி முகவரி எண். 40 ஜாலான் மெலாத்தி 21, தாமான் மெலாத்தி ஜெஞ்ஜாரோம் ஆகிய முகவரியில் உள்ளவர்கள் என்று அவர் கூறினார்.

47 வயதுடைய நபரின் கொலையில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆறு பேரை இதுவரை கைது செய்துள்ளதாக எசானி கூறினார். அவர்கள் அனைவரும் நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மற்ற சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

இதுவரை, பாதிக்கப்பட்டவர் கொல்லப்பட்டதற்கான காரணம் மற்றும் நோக்கம் குறித்து போலீசார் இன்னும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார். எனவே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது விசாரணை அதிகாரி Mohamad Syahrir Zabidi         012 -6650895 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here