கோலாலம்பூர், நவம்பர் 17 :
நவம்பர் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை வரை எரிப்பொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
புதன்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட ஒரு அறிக்கையில், RON97 மற்றும் RON95 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு முறையே RM3.08 மற்றும் RM2.05 ஆக இருக்கும் என்று கூறியது.
டீசல் விலை லிட்டருக்கு ரிங்கிட் 2.15 ஆக மாறாமல் உள்ளது.
மேலும் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வுகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் அதன் உச்சவரம்பு விலையான RON95 பெட்ரோல் லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும், அதன் விலை தற்போதைய உச்சவரம்பு விலையை தாண்டினாலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதன் உச்சவரம்பு விலையை பராமரிக்கும் என்றும் அமைச்சகம் கூறியது.
அத்தோடு “உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் அமைச்சகம் மேலும் கூறியது.
வாராந்திர எரிப்பொருள் விலை நிர்ணயம் 2019 ஜனவரி 5 அன்று தானியங்கி விலையிடல் பொறிமுறையின் (APM) கீழ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.