24 மணி நேரத்தில் கோவிட் தொற்று 5,594 – குணமடைந்தோர் 4,908

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 5,594 கோவிட்-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று 4,854 ஆக இருந்தது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,597,080 தொற்றுகளாக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

4,908 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 532 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 424 பேர் கோவிட் -19 தொற்றும்  மற்றும் 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். மொத்தம் 266 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 168 நோயாளிகள் கோவிட்-19  தொற்று எனவும்  மற்றும் மீதமுள்ள 98 பேர் நேர்மறையாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இன்று 5,570 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 5,297 மலேசியர்கள் மற்றும் 273 வெளிநாட்டினர் மற்றும் 24 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன. இதில், நோயறிதலின் போது 1.5% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர். இன்று 10 கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here