சிகாம்புட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் கோலாலம்பூரின் வான்வெளியில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்தது. வேலை நேரம் முடிந்து நகரவாசிகளின் வாகனங்களால் சாலையில் நெரிசல் ஏற்பட்டிருக்கும் நேரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீ விபத்து பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர் சல்மி சைட் கூறுகையில், செந்தூலில் இருந்து அடர்ந்த புகை மூட்டம் காணப்பட்டதாக கூறினார்.