டிசம்பர் 3 “மலேசிய பாத்தேக் தினம்”- பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 2 : இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதியை “மலேசிய பாத்தேக் தினமாக” பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.

நேற்று இரவு தொலைக்காட்சி அலைவரிசை டிவி1 (TV1) அலைவரிசையிலும், சமூக ஊடகங்களிலும், ஆர்டிஎம்-அலைவரிசைகளிலும் ஒளிபரப்பான சிறப்பு உரையில், இந்தப் பிரகடனம் அனைத்து குடிமக்கள், தனியார் துறை மற்றும் பல இன சமூகத்தினர் மலேசிய பாத்தேக் ஆடைகளை அணிவதை ஊக்குவிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என்றார்.

இந்த முயற்சி மலேசிய குடும்பம் என்ற கருத்துடன் ஒத்துப்போனதாக அவர் கூறினார், அதாவது பல்வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் உள்ளூர் பாத்தேக்கின் தனித்துவத்தையும் அழகையும் வடிவமைப்பதில் ஒன்றுபட்டுள்ளனர்.

“இந்த நாளின் பிரகடனம் உள்ளூர் பாத்தேக் கைவினைத் தொழில் மற்றும் நாட்டின் பாத்தேக் உற்பத்தி சங்கிலியை வலுப்படுத்த ஒரு ஊக்குவிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், அமைச்சரவை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாடாளுமன்றம் உட்பட அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் மலேசிய குடும்பங்களுக்கு மலேசியன் பாத்தேக் அணியும் நாளாக நிர்ணயித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

– பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here