பெரா, டிசம்பர் 11 :
மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதற்கு அம்னோ கட்சி தனக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்புவதாக, அம்னோ கட்சியின் துணைத் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன் நாட்டின் பொருளாதாரமும் மீண்டு வருவதைக் காண முடிகின்ற போதிலும், இன்னும் அனைத்துப் பணிகளும் செய்து முடிக்கப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்.
“நன் போராடுவதற்கான வலிமையைப் பெறுவதற்கு, கட்சியின் ஆதரவு தேவை. நாட்டில் மிகப்பெரிய பிரச்சினை மக்கள் பிரச்சினையே தவிர முடிவில்லாத அரசியல் அல்ல.”
“(கோவிட் -19) தொற்றுக்கள் குறைந்து வருகின்றன, ஆனால் எண்ணிக்கை இன்னும் 4,000 ஆக உள்ளது. நாங்கள் இப்போது கோவிட்-19 இலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளோம் என்று நினைக்க வேண்டாம், எனது பொறுப்பு இன்னும் பெரியது, நான் அதைச் செய்ய வேண்டும், ”என்று “the Bera Umno Wanita, Youth and Puteri (பெரா அம்னோ வனித்தா, யூத் டான் புத்ரி)” பிரதிநிதிகள் கூட்டத்தைத் தொடங்கும் போது உரையாற்றுகையில், அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், அடுத்த பொதுத் தேர்தலில் (GE) கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக மலாய் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைப்பதில் கட்சியின் போராட்டத்தின் அடிப்படைகளுக்கு அம்னோ திரும்ப வேண்டும் என்றும் இஸ்மாயில் சப்ரி அழைப்பு விடுத்தார்.
மேலும் கடந்த பொதுத் தேர்தலில் அம்னோவின் தோல்வியானது, கட்சியில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டுவதாக அமைய வேண்டும் என்றார்.
“நாங்கள் இன்று அரசாங்கத்தை அமைத்தோம், நாங்கள் GE ஐ வென்றதால் அல்ல, ஆனால் நாங்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியதால் என்பதை நாம் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.
“அம்னோ கட்சியின் ஸ்தாபனத்தின் அசல் நோக்கம் முஸ்லிம்களையும் மலாய்க்காரர்களையும் ஒன்றிணைப்பதாகும், ஆனால் அதற்கு நேர்மாறாக இப்போது நடக்கிறது, பல முகாம்கள் மற்றும் கட்சியில் பிளவுகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
மேலும் அம்னோ துணைத் தலைவரான இஸ்மாயில் சப்ரி, சமீபத்தில் நடந்த மலாக்கா மாநிலத் தேர்தலில் தமது கட்சியின் அமோக வெற்றியைப் பார்த்து கர்வம் கொள்ள வேண்டாம் என்று கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.