மார்கழி மாதம் என்றால் நம் நினைவுக்கு வருவது ஆண்டாளும் திருப்பாவையும் தான். ஆண்டாள் பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர். ஆண்டாளை பெரியாழ்வார் குழந்தையை கண்டெடுத்தார்.
அவருக்கு ஆண்டாள் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ஆண்டாள் சிறு வயது முதலே கிருஷ்ணரிடம் தீவிர பக்தியுடன் வளர்ந்து வந்தார். திருமண வயது வந்தபோது கிருஷ்ணனை (இறைவனை) மணக்க வேண்டும் என்று ஆண்டாள் விரும்பினார். ஸ்ரீ ஆண்டாள் தன் திருவருளைப் போற்றிப் புகழ்ந்து பல பாசுரங்களில் பாடி, கிருஷ்ணரை அடையத் தவம் செய்கிறாள்.
திருப்பாவை அவள் வழிபாட்டை வெளிப்படுத்தும் ஒரு படைப்பாகும். இறுதியில் ஆண்டவன் வந்து ஆண்டாளை மணந்து கொள்கிறார். இந்த புனித மாதத்தின் முப்பது நாட்களுக்கான ஸ்ரீ ஆண்டாளின் முப்பது பாசுரங்கள், பகவான் நாராயணன் / கிருஷ்ணரின் வழிபாடு மற்றும் துதிக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
ஸ்ரீ ஆண்டாள் (ஒரு மாதத்திற்கான தெய்வீகப் பணி) மேற்கொள்வதற்கான ஊக்கத்தையும் ஆற்றலையும் உருவாக்கி, பணியின் வெற்றியை அடைவதற்காக தன்னை அரிப்பணித்து கொண்டார்.
பின்னர், அவள் (மனித இனத்தின் சார்பாக) இறைவனிடம், அடுத்த ஏழு காலங்களிலும், ஏழு பிறவிகளிலும், எல்லா அவதாரங்களிலும் பகவான் நாராயணன் / கிருஷ்ணருடன் இருக்கும் பாக்கியம் கிடைத்து நாம் வழிபட வேண்டும் என்று கூறினார்.
ஸ்ரீ ஆண்டாள் எல்லா நேரங்களிலும் கிருஷ்ணரிடம் அசைக்க முடியாத, சந்தேகத்திற்கு இடமில்லாத, முற்றிலும் அர்ப்பணிப்புள்ள நம்பிக்கையை கொண்டிருக்கிறார். அது நம் மனதிலும், ஆன்மாவிலும், பக்தியிலும் இருக்க வேண்டும்.
எனவே, இப்புனித மாதத்தில் இறைவனை வழிபடும் அனைத்து பக்தர்களும் இறைவனின் அருளையும் ஆசிர்வாதத்தையும் என்றென்றும் பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
இந்த மார்கழி மாதம் டிச.16,2021 முதல் ஜன.13, 2022 வரை மார்கழி மாதத்தில், கிள்ளான் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் 30 நாட்களுக்கு விசேஷ பூஜையைத் தொடர்ந்து திருப்பாவை பாசுரம் ஓதப்படும்.
மேற்கண்ட பூஜையில் ஆர்வமுள்ள பக்தர்கள், மேலும் விவரங்களுக்கு சரஸ் (012-2165339) அல்லது அலுவலகம் 03-33711763 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.