பெட்டாலிங் ஜெயா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்கேஎன்) அனுப்பிய வழக்கமான எஸ்எம்எஸ் செய்திகளுக்கு அரசாங்கம் ஒரு காசு கூட செலவிடவில்லை.
பொதுச் சேவை அறிவிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (டெல்கோஸ்) செலவுகளை ஏற்றுக்கொண்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிறுவன சமூகப் பொறுப்பின் (CSR) ஒரு பகுதியாக SMS செய்திகளின் விலையை உள்வாங்கிக் கொள்கின்றன என்று சிறப்பு செயல்பாடுகள் அமைச்சர் அப்துல் லத்தீஃப் அஹ்மத் லிம் கிட் சியாங்கிற்கு (PH-Iskandar Puteri) எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
CSR பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் Celcom, Digi, Maxis, UMobile, ALTEL, Webe, Tune Talk, Pavocomms, YTL, XOX, Redtone, Red One மற்றும் Merchantrade ஆகும்.