சிரம்பான், டிசம்பர் 18 :
நெகிரி செம்பிலானில் நேற்று முதல் 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால், 4 மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ரெம்பாவ், தம்பின், கோல பிலா மற்றும் போர்ட்டிக்சன் ஆகியவையாகும்.
மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு அறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தம்பினில், பத்து 6, கம்போங் கெருவில் மொத்தம் 42 பாதிக்கப்பட்டவர்கள் நேற்று இரவு தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர்.
பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறு வீடுகள் ஒரு மீட்டருக்கும் அதிகமான தண்ணீரில் மூழ்கியுள்ளதாக அவர் கூறினார்.
“இரவு 11.18 மணிக்கு வெள்ளம் தொடர்பில் அழைப்பு வந்தவுடன், உறுப்பினர்கள் உடனடியாக இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
“பாதிக்கப்பட்ட அனைவரும் சுராவ் கெரு ஹிலிரில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்,” என்று அவர் இன்று கூறினார்.
அவரது கூற்றுப்படி, போட்டிக்சனில் ஐந்து ஆண்கள் மற்றும் 24 பெண்களைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் 29 குடியிருப்பாளர்கள் தற்காலிக வெள்ள நிவாரண மையத்திற்கு (பிபிஎஸ்) மாற்றப்பட்டனர், இந்த (பிபிஎஸ் கம்போங் பெர்மாடாங் பாசீரில் உள்ள சமூகக் கூடத்தில் திறக்கப்பட்டது.
“கம்போங் ஜிமா லாமாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 65 பேர் மீட்கப்பட்டனர், அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்ட பலாய் ராய ஜிமா லாமாவில் உள்ள வெள்ள நிவாரண மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
“இன்று அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது, தீயணைப்பு படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, தேவைப்பட்டால் மீட்பு பணியை மேற்கொள்ள தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.




















