கோவிட் தொற்றின் நேற்றைய இறப்புகள் 29

சுகாதார அமைச்சகம் அதன் கிட்ஹப் தரவுத்தளத்தின்படி, நேற்று 29 கோவிட் -19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதில் ஏழு சேர்க்கப்ப்ட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை இப்போது 31,073 ஆக உள்ளது.

பேராக்கில் ஏழு  இறப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (6), சபா (4), பினாங்கு (3), கெடா (3), கோலாலம்பூர் (2), மலாக்கா (1), ஜோகூர் (1), பகாங் (1) மற்றும் சரவாக் (1).

தெரெங்கானு, நெகிரி செம்பிலான், கிளந்தான் பெர்லிஸ், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய இடங்களில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

நள்ளிரவு நிலவரப்படி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) 391 உட்பட 54,094 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன,.அவர்களில் 215 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மேலும் 5,435 பேர் குணமடைந்துள்ளனர். மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 2,715,847 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here