வெள்ளத்திற்கு பின்னரான தொற்று நோய்களால் 78 பேர் பாதிப்பு – சுகாதார தலைமை இயக்குநர் தகவல்

கோலாலம்பூர், டிசம்பர் 29 :

நேற்று பிற்பகல் நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 78 பேருக்கு தொற்று நோய்களும் கண்டறியப்பட்டுள்ளன, இதில் அதிகபட்சமாக கடுமையான சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் (ஏஆர்ஐ) கொண்ட 53 வழக்குகள் உள்ளன என்று சுகாதார தலைமை இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும் “17 பேருக்கு தோல் நோய்கள், கடுமையான இரைப்பை குடல் அழற்சியின் (AGE) கொண்ட 4 பேர் இந்த அறிகுறிகளையும் மற்றும் கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் ஆகிய நோய்கள் கொண்ட தலா இரண்டு பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் நிலவரப்படி, கிளந்தான், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய ஐந்து மாநிலங்களில் மொத்தம் 19,099 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 121 பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே நேற்று புதிய கிளஸ்டர்கள் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்கவைக்கப்பட்டுள்ள மொத்தம் 434 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 தொற்றுக்களை உள்ளடக்கிய ஒரு கிளஸ்டர் மட்டுமே பதிவாகியுள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கோவிட் -19 இன் ஆபத்து நிலையை மீட்புப் பணியாளர்களுக்கு தெரிவிக்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here