நாளை தொடங்கி புத்தாண்டு வரை பல பூங்காக்களை மூடுகிறது கோத்தா கினாபாலு நகராண்மை கழகம்

கோத்தா கினாபாலு, டிசம்பர் 30 :

கோத்தா கினாபாலு நகராண்மை கழகம் (DBKK) நாளை தொடங்கி புத்தாண்டு வரை பல பொதுப் பூங்காக்களை பொதுமக்களுக்காக மூடுகிறது.

மூடப்படும் பூங்காக்களில் லிக்காஸ் பே 1 மற்றும் 2 மற்றும் தஞ்சோங் அரு 1 ஆகியவை அடங்கும்.

நாளை நண்பகல் 1 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மூடப்படும் என்று அதன் மேயர் டத்தோ நூர்லிசா அவாங் அலிப் தெரிவித்தார். மேலும் இந்த மூடல் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

“மூடப்படும் போது அந்த பூங்காக்களை பார்வையிடவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு DBKK அறிவுறுத்துகிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் மாநிலத்தில் நேற்று 192 பேருக்கு கோவிட் -19 தொற்று பதிவானது. மாறாக இன்று அது 226 பேராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here