அரசாங்கம் ஊழியர் சேமநிதி (EPF) சேமிப்பை மேலும் திரும்பப் பெற அனுமதிக்காத போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதி உதவியை விரைவுபடுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் புத்ராஜெயாவை வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் EPF திரும்பப் பெறுவதை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் இழப்புகளின் அளவிற்கு ஏற்ப உடனடியாக RM5,000 முதல் RM10,000 வரை நிதி உதவி அளித்திருக்க வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்தப் புத்தாண்டில், தேசத்தை வழிநடத்த அரசாங்கம் ஒரு புதிய செயல்திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக நெருக்கடி காலங்களில் மற்றும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் என்றார்.
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் 10,000 வெள்ளி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதே நேரத்தில் வெள்ளத்தில் வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்த பாதிக்கப்பட்டவர்கள் RM61,000 வரை பெறலாம். பாதிக்கப்பட்டவர்கள் EPF சேமிப்பில் இருந்து உதவி பெற்றால் அது சுமையை குறைக்கும் என்று அவர் கூறினார்.
























