கோலாலம்பூர், ஜனவரி 4 :
மழை வெள்ளத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியான KM77-KM78 இன்று அதிகாலை 3 மணி முதல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக அதன் அனுசரணையாளர் ANIH Bhd தெரிவித்துள்ளது.
அதன் தலைமை மூத்த பொது மேலாளர் ரட்ஸிமா முகமட் ரட்ஸி கூறுகையில், இந்த பகுதியில் பழுது மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், காராக் நகரை நோக்கி செல்பவர்கள் இனி காராக் டோல் பிளாசாவிற்கு முன் யு-டர்ன் செய்ய வேண்டியதில்லை என்றும் கூறினார்.
“தற்போது, KM66 மற்றும் KM70 (கோலாலம்பூருக்குச் செல்லும்) இடையேயான சாலை இருபுறமும் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன ஓட்டிகளும் சுங்கை துவாவில் இருந்து KM74.8 இல் தொடங்கி RM77.3 வரையிலான கான்ட்ரா லேன்களை அணுகும் போது பாதுகாப்பு அறிகுறிகளுக்கு இணங்க அறிவுறுத்தப்படுகிறார்கள், ”என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
சமீபத்திய போக்குவரத்து அறிவிப்புகள் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) அகப்பக்கத்திலும், ANIH பெர்ஹாட் அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்களான @LPTTrafik இல் Twitter மற்றும் @Lebuhraya Pantai Timur Facebook இல் கிடைக்கும்.
மேலும் பொதுமக்கள் LPTயின் தொலைபேசி எண் 09-5479111 அல்லது 1-700-818-700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.