கோவிட் 19 தொற்று நோய்க்கு இன்று 48 பேர் இலக்காகியுள்ள வேளையில் இன்று மட்டும் 53 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
மொத்த மரண எண்ணிக்கை 115ஆக இருக்கும் வேளையில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7,185 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,912 ஆக இருக்கும் வேளையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,158 ஆக பதிவாகி இருக்கிறது.
இன்று பதிவான 48 பாதிப்புகளில் 4 பாதிப்பு வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 44 பாதிப்புகள் உள்ளூர் பாதிப்புகளாகும்.