4 கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து – வாகனமோட்டி ஒருவர் கைது

ஜாலான் கோம்பாக்,  ஜாலான் கெந்திங் கிள்ளான் நோக்கிய போக்குவரத்து சமிஞ்சை விளக்கு சந்திப்பில், நான்கு வாகனங்களுடனான விபத்தை ஏற்படுத்திய ஹோண்டா சிவிக் வாகன ஓட்டுநரை  போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) தலைவர், உதவி ஆணையர் ஶ்ரீபுடின் முகமட் சலே இரவு 8.20 மணியளவில் ஹோண்டா சிவிக், புரோட்டான் சாகா, பெரோடுவா மைவி மற்றும் இரண்டு பெரோடுவா பெசா சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்ததாகக் கூறினார்.

45 வயதுடைய நபர் ஹோண்டா சிவிக் காரை வலதுபுறப் பாதையில் ஓட்டிச் சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கார் கட்டுப்பாட்டை இழந்து, போக்குவரத்து விளக்குகளில் நின்று கொண்டிருந்த நான்கு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

எனினும், விபத்தில் சிக்கிய ஓட்டுநர்கள் யாரும் காயம் அடையவில்லை என அவர் இன்று  அறிக்கையில் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபர் சிறுநீர் பரிசோதனைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

மற்ற பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 43 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார். ஏதேனும் தகவல் உள்ளவர்கள், ஜாலான் துன் எச்எஸ் லீ போக்குவரத்து காவல் நிலையத்தை 03-20719999 என்ற எண்ணில் அல்லது JSPT கோலாலம்பூர் ஹாட்லைன் 03-20260267/69 என்ற எண்ணில் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here